| அதி. 9--மாதரைப் படிப்பித்தல் |
| பெண்கட்கும் கல்வியே பெருந்துணை யாகும் |
94 | கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன் செல்வழி யறிந்திடான் வித்தை தேறுமுன் அல்வளர் கூந்தலார் அறிய நூலின்றி நல்வழி யுணர்ந்ததில் நடக்கற் பாலரோ. |
|
| யாவர்க்கும் படிப்பே நல்வழிகாட்டும். ஆண்மகனும் கற்பதன் முன் செல்லும் நல்வழி அறியான். அப்படியிருக்கப் பெண்மகள் நூல்படியாமல் எப்படி நல்வழி யறிந்து நடப்பள்? |
| கல்வி-படிப்பு. வித்தை-கல்வி. அல்-இருள். வளர்-போன்ற. கூந்தல்-தலை. |
| 1 |
| கண்பறித்தலாம் பெண்பால் கல்வி கொடாமை |
95 | பெண்மகள் கெடுவளென் றஞ்சிப் பெற்றவன் உண்மைநூ லவட்குணர்த் தாமை தன்மனைக் கண்மறு புருடரைக் காணு மென்றதை எண்மையாய்த் தவன்பறித் தெறிதல் ஒக்குமே. |
|
| கற்றால் பெண்மகள் கெட்டுவிடுவாள் என்று பெற்றவன் கல்வி கொடாமலிருப்பது, தன்மனையவள் கண் உடையவளாக இருந்தால் அயலானைக் காண்பாள் என்று கருதிக் கணவன் அவள் கண்ணை எளிமையாகப் பிடுங்குவதை யொக்கும். |
| மறுபுருடன்-அயலான். தவன்-கணவன். எண்மை-எளிமை. பறித்தல்-பிடுங்குதல். |
| 2 |
| நூலுணர்ந்தார் அயலானை நோக்கவும் அஞ்சார் |
96 | காவலன் பயத்தினாற் கற்பைக் காக்கின்ற பாவையர் அரியநூல் பயன்தெ ரிந்திடில் பாவபுண் ணியநெறி அறியும் பண்பினால் சீவனீங் கினுமய லாரைச் சேர்வரோ. |
|