| மாதரைப் படிப்பித்தல் |
| வேந்தன் காவலுக்கஞ்சிக் கற்பைக் காக்கின்ற பெண்கள், உண்மை நூல் உணர்ந்தால் பாவ புண்ணியங்கட்கு மிகவும் அஞ்சி உயிர் நீங்கினும் கற்பைக் கைவிடார். |
| காவலன்-வேந்தன். அரியநூல்-உண்மை நூல். பாவ புண்ணியம்-தீமை நன்மை. சீவன்-உயிர். |
| 3 |
| மருந்துபோல் கல்வி பெண் மாண்பு தந்திடும் |
97 | பொருந்துநற் கலைதெரி பூவை கற்பது திருந்தியே மிகுமலால் தேய்ந்து போமெனல் வருந்திடா துயிர்தரு மருந்தை மானிடர் அருந்திடில் சாவரென் றறைத லொக்குமே. |
|
| பெண்களுக்கு நாற்பொருளும் பொருந்தும் உண்மை நூல்களைக் கற்பதால் அறிவு வளர்ந்து மிகும் அல்லாது தேய்ந்து போகாது. தேயுமென்று சிலர் கூறுவது, உயிரை வளர்க்கும் மருந்தை மக்கள் உண்ணின் மாள்வர் என்று சொல்வதை யொக்கும். |
| பூவை-பெண். மருந்து-அமிழ்து. |
| 4 |
| கல்லாப்பெண் நன்னெறி காணகில் லாளே |
98 | முடவரே நடக்கினும் மூங்கை பேசினும் திடமொடந் தகர்வழி தெரிந்து செல்லினும் மடமயி லனையர்நூல் வாசி யாரெனில் அடமில்நன் னெறிதெரிந் தமையற் பாலரோ. |
|
| கால் இல்லாதவர் நடத்தலும், ஊமையர் பேசலும், குருடர் வழிதெரிந்து செல்லுதலும் ஒரு வேளை நிகழ்ந்தாலும், பெண்கள் நூல் கல்லாவிடின் குற்றமற்ற நல்வழி தெரிந்து நடத்தல் முடியாது. |
| மூங்கை-ஊமை. அந்தகர்-குருடர். அடம்-குற்றம். |
| 5 |
| விளக்கை மறைப்பதாம் பெண்கல்வி விளக்காமை |
99 | அரிவையர் நேசமும் ஆர அல்லினில் விரிசுடர் விளக்கென விளங்கு வாரவர்க்கு |
|