பக்கம் எண் :

52

  நீதிநூல்
 
 
உரியநன் னூலுணர்த் தாமை கூடையால்
எரியொளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே.
  பெண்கள் அன்பு நிறைய இருளினில் ஒளிதரும் விளக்குப் போல விளங்குவர். அவர்களுக்குரிய நல்ல நூல்களை உணர்த்தாதிருப்பது விளக்கைக் கூடையால் மறைப்பதை ஒக்கும்.
  அரிவை-பெண். நேசம்-அன்பு. ஆர-நிறைய. அல்-இருள்.
 

6

  படிப்பிலாப் பெண்ணேல் பாதியுடற் கழகிலை
100
நீதிநூன் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர்
ஓதியர்க்கு ஓதிடா தொழித்தன் மெய்யினில்
பாதியை யேயலங் கரித்துப் பாதிமெய்
மீதினி லணியின்றி விடுத்தல் ஒக்குமே.
 

அறமுறை நூல்களை ஆண்களுக்கு உணர்த்திப் பெண்களுக்கு உணர்த்தாதிருப்பது, உடம்பில் ஒரு பாதியை ஆடை அணிபூச்சால் அழகு செய்து, மற்றொரு பாதியை அழகு செய்யாமல் விடுவதை யொக்கும்.

 

நீதி-அறமுறை. மைந்தர்-ஆண்கள். ஓதியர்-கூந்தலையுடைய பெண்கள். அலங்கரித்தல்-அழகுபடுத்தல்.

 

7

  கண்போற் பெண்களும் காணிற் சமமே
101
இக்கினை நகுமொழி யெழின்மின் னாரின்ஆண்
மக்கள்மிக் கோரெனல் மடமை யாமிரண்டு
அக்கமும் ஒக்குமே யன்றி நல்லகண்
எக்கண்மற் றெக்கணே யிழிவு டைக்கணே.
  கரும்புங் கசக்கும்படி இனிய சொற்களைச் சொல்லும் அழகிய பெண்களைக் காட்டிலும் ஆண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லுவது அறியாமை ஆகும். இரண்டு கண்களுள் உயர்ந்த கண் எது? இழிந்த கண் எது? (இரண்டும் சமமே.)
  இக்கு-கரும்பு. அக்கம்-கண்.
 

8