| மாதரைப் படிப்பித்தல் |
| கல்லாப்பெண் குடும்பழுத்தல் நீந்தறியான் கடலழுத்தல் |
102 | கலையு ணர்ந்தறி யாதவோர் கன்னியை உலையு றுஞ்சமு சாரத்தின் உய்க்குதல் நிலையு ணர்ந்தறல் நீந்தறி யான்றனை அலைக டற்கண் அமிழ்த்தலை யொக்குமே. |
|
| கல்லாத பெண்களைத் துன்பமிக்க குடும்பவாழ்க்கையில் செலுத்துதல், ஆறு குளம் நீந்த அறியாதவனைக் கடலினுள் தள்ளுவதை யொக்கும். |
| உலைவு-துன்பம். அறல்-நீர். |
| 9 |
| வேறு |
| கல்லாப் பெண் உயிர் இல்லா உடலே |
103 | நல்லறி வேயணி நன்னுத லார்க்கஃது இல்லவ ரோடுமி யைந்து கலத்தல் புல்லுயிர் நீங்குபு ழுக்கொள் சவத்தைக் கல்லுரு வைப்புணர் காம நிகர்த்தே. |
|
| பெண்களுக்கு நல்லறிவே அணிகலத்தினும் மிக்க அழகு தருவது. அவ்வழகில்லாருடன் கூடி வாழ்தல் உயிரற்ற உடலோடும் உணர்வற்ற கல்லுருவோடுங் கூடி வாழ்வதை யொக்கும். |
| அணி-அழகு. நன்னுதலார்-பெண்கள். |
| 10 |