| உடன் பிறந்தாரியல்பு |
| குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர் |
106 | பயந்தவர் சோதரர் தமரைப் பண்பொடு வியந்துபே ணாதவன் வேறு ளோர்களை இயைந்துபே ணானென எண்ணி நீக்குவர் உயர்ந்தவ ரவனொடும் உறவு தன்னையே.. |
|
| பெற்றோர்களையும் உடன் பிறந்தார்களையும் உறவினர்களையும் அன்பொடு பேணாதவன், மற்றையோர்களை இணங்கிப் பேணமாட்டா னென்று கருதி உயர்ந்தோர் அவனுடன் உறவு கொள்ளுதலை நீக்குவர். |
| பயந்தவர்-பெற்றோர், தாய்தந்தையர். தமர்-உறவினர். |
| 3 |
| ஒற்றுமைசேர் உடன்பிறப்பை ஒருவரும் வெல்லார். |
107 | ஒற்றையொண் சுடரினை யொழிக்கும் மெல்வளி கற்றையாப் பலசுடர் கலப்பின் மாவளி சற்றும்வெல் லாதுசூழ் தமர்ச கோதரர் பற்றொடு மருவிடிற் படரு றார்களே. |
|
| பலதிரியும் ஒன்றாகி எரியும் சுடரினைப் பெருங் காற்றாலும் அவிக்கமுடியாது. ஆனால் ஒருதிரியாய்த் தனித்து எரியின் சிறு காற்றும் அணைத்துவிடும். அதனால், ஒற்றுமையாயுள்ள உடன் பிறப்பாளர்களை எவரும் வெல்லக்கருதார் என்பது துணிபு. |
| மெல் வளி-சிறு காற்று. |
| 4 |
| அமைஉடன் பிறப்பை வெல்லார் அனைவரும் |
108 | ஓரிழை யறுத்திடல் எளிதொன் றாகவே சேரிழை பலவுறத் திரித்த தாம்பினை யாருமே சிதைத்திடா ரமைச கோதரர் சீரொடு பொருந்திடில் திரல்கொள் வாரரோ. |
|
| கயிறாதற்குரிய ஓர் இழையினை அறுத்தல் யாவர்க்கும் எளிது. அவ்விழை பல ஒன்றாகிக் கயிறாக அமையின், அதனை யாராலும் அறுத்தல் முடியாது. அதுபோல உடன் பிறந்தார் பிரிந்து போய்த் தனிப்பாரானால் எளியரும் எளிதில் வெல்லுவர். ஒன்றுகூடி வாழின் வலியரும் அரிது முயன்றும் வெல்லார். |
| தாம்பு-கயிறு. சிதைத்திடார்-அறுத்திடார். |
| 5 |