பக்கம் எண் :

56

  அதி. 11--கணவ மனைவியரியல்பு
  உடலுயிர்ச் சண்டையாம் காதலர் பிணக்கம்
109
ஆவியின்றி யுடலில்லை யுடலின்றி யாவியிலை
     யதுபோற் பத்தா
தேவியெனு மிருவர்சேர்ந் தோருருவாஞ் செழுமலருந்
     தேனும் போல
மேவியவ ரிருவருமே நள்ளாது முரண்செய்யில்
     விளங்கு மெய்யுஞ்
சீவனுமொன் றோடொன்று போராடி யழிந்ததொக்குஞ்
     செப்புங் காலே.
 

உயிரில்லாமல் உடம்பில்லை; உடம்பில்லாமல் உயிரில்லை. அது போன்று கணவனில்லாமல் மனைவி யில்லை. மனைவியில்லாமல் கணவ னில்லை. இவ்விருவரும் பூவுந் தேனும் போலச் சேர்ந்து ஓருருவானவர். இவர்கள் ஒற்றுமையாக வாழாது பிணங்குவாரானால், அப்பிணக்கம் உடம்பும் உயிரும் ஒன்றோடொன்று சண்டையிடுவதை யொக்கும்.

 

ஆவி-உயிர். பத்தா-கணவங் தேவி-மனைவி. நள்ளல்-சேர்தல்.

 

1

  காதலர் ஒற்றுமை கணக்கிலாப் பெரும்பொருள்
110
மணியுமொளி யும்போலாண் மகனுமனை
   வியும்பொருந்தி வாழு வாரேல்
பிணியுறுமா துலரெனினும் பெருஞ்செல்வர்
   நகுலமும்வெம் பெரும்பாம் பும்போல்
தணியாத பகையுற்று நள்ளாரேல்
   உயிரற்ற சவத்தின் மீது
பணிகண்மிகப் பூட்டியலங் கரித்தலொக்கு
   மவர்செல்வப் பயன்தா னம்மா..
  மணியும் ஒளியும்போல் கணவனும் மனைவியும் மனம் பொருந்தி வாழுவாரானால், அவர்கள் நோயுறும் வறியவர்களே