பக்கம் எண் :

59

  கணவ மனைவியரியல்பு
 
  எல்லாரினும் சிறந்த கணவனோ டிகலல்பழி
114
தந்தைதாய் சோதரரை நீங்கிமின்னா ரொருவன்கை
     தன்னைப் பற்றிப்
பந்தமுற லாலவரெல் லாரினுமிக் குரிமையுளான்
     பத்தா வன்றோ
இந்தநிலை யுணராம லவனையிகல் செயுமேழை
     யிகப ரத்தை
நிந்தையுற வழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல்
     நிகர்கு மாதோ..
 

தந்தை தாய் உடன்பிறப்பு முதலியவர்களினும் கணவனே பெண்களுக்கு உரியவனாவன். இதனை உணராமல் கணவனுடன் மாறுகொள்ளும் பெண் இம்மை மறுமை நலங்களைப் பழியுண்டாகக் கெடுத்தலால் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டவளாவாள்.

 

மின்னார்-பெண்கள். இகல்-மாறுபாடு. நிந்தை-பழி. நிகர்க்கும்-ஒக்கும்.

 

6

  செம்மையிலாக் காதலரைச் செம்பொருள் காயும்
115
பொய்யான நாடகத்திற் பதிமனைபோல் வேடமுற்றோர்
     பூண்ட கன்மஞ்
செய்யாரேல் நகைக்கிடமா முலகறிய மணவாளன்
     தேவி யென்ன
மெய்யாவுற் றோர்தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச
     விநோதக் கூத்தைக்
கையாற்கொண் டாட்டுவிக்கும் பரனவரை யழற்புகுத்திக்
     காய்வா னம்மா.
  ஊர் நாடகத்தில் பொய்யாகக் கணவன் மனைவியென்று கோலங்கொண்டார் செம்மையாக நடிக்காவிட்டால் எல்லாரும் சிரிப்பர். அதுபோல உலக நாடகத்தில் உண்மையாகவே கணவன் மனைவியரென்ற இருவரும் செம்மையாக ஒழுகல் வேண்டும். இல்லாவிட்டால் உலக நாடகத்தைச் செய்விக்கும் ஆண்டவன் அவர்களைர்த் துன்பத்திற் புகுத்தி வருத்துவன.