பக்கம் எண் :

62

  நீதிநூல்
 
 
இனையவரை யுபசரித்தல் விருந்தோம்பல் நம்பணிக
     ளியற்ற லென்னும்
வினைகளினா லயர்மனையைப் பரிவுடனா தரவுசெய்ய
     வேண்டு நெஞ்சே.
 

நெஞ்சே! மனைவி நமக்குரியவளானபின், அவளுக்குத் தன் தாய் தந்தையரில்லத்தும் இன்பம் இல்லை. நம் வீட்டிலும் மனையறம் பேணல், கருத்தாங்கல், மகப்பெறுதல், வளர்த்தல், மாமன் மாமியாரையும் பாதுகாத்தல், விருந்தோம்பல், நமக்கு வேண்டுவன செய்தல் முதலியவற்றால் தளர்ந்து மெலிந்து வருந்தும் வருத்தம் மிகுதி. ஆதலின், அவளைப் பேரன்புடன் துணைநின்று இன்புறச்செய்ய வேண்டுவது நம் கடன்.

 

பரிவு-பேரன்பு. ஆதரவு-துணை.

 

11

  பின்தூங்கி முன்னுணரும் பெண்ணே பெரும்பொருள்
120
தந்துணைவர் வடிவிலா முடவரெனி னுந்திருவின்
     றனையன் ஒப்பாம்
அந்தமுளார் அயல்குமர ரெனினும்விடம் அனையராம்
     அரும ணாளர்
வந்தமுதுண் டுறங்கியபின் தாமுண்டு துயின்று முனம்
     வல்லெழுந்து
பந்தமுறுங் கருமமெலா முடிப்பர்கற்பி னணிபூண்ட
     படைக்கண் ணாரே.
  கணவன் கை கால் இல்லா நொண்டியாக இருப்பினும் காமனை யொப்பான். அயலார் பேரழகு வாய்ந்தவரே எனினும் கொல்லும் நஞ்சினை ஒப்பார். இவ்வகை நினைவுடன் கணவன் உண்டு உறங்கியபின் தான் உண்டு உறங்குதலும், கணவன் எழுமுன் எழுந்து வேண்டுவன செய்தலும் கடனாகக் கொண்டவளே கற்புடையாள்.
  திருவின் தனயன்-திருமகள் மகன்.
 

12