| கணவ மனைவியரியல்பு |
| எப்பணிசெய் தாலுமில்லாள் எழிற்கணவன் நினைப்பொழியாள் |
121 | வினைப்பகைநீர் பெரியரில்வாழ் வினிற்கலந்து நின்றாலும் வேத நாதன் தனைப்பரவி நினைத்தலென்றும் ஒழியார்போல் கற்பின்மிக்க தைய லார்தம் மனைப்பணிகள் செய்தாலுந் துயின்றாலுங் கனவினுந்தம் மணாளர் மாட்டு நினைப்பொழியார் கணவருடன் அவர்மனமொன் றாய்க்கலந்து நிற்கு மாதோ. |
|
| மலமற்ற பெரியோர் மனைவாழ்வு நடத்தினும் தொழுங்கடவுள் நினைவாகவே இருப்பர். அதுபோன்று கற்புடைய மனைவி, மனைக்கடன் செய்தாலும், உறங்கினாலும், விழித்தாலும் கணவன் நினைவாகவே இருப்பள். இருவர்மனமும் ஒன்றாகவே இருக்கும். |
| வேதநாதன்-கடவுள். வேதம்-கடவுள் நூல். தையலார்-பெண்கள். |
| 13 |
| இணைபிரியா திருக்கநல்கும் இடம்பொருள் பேரின்பே |
122 | ஏந்தலாந் தந்தைத்தாய் சகியர்கோ யிலைவிட்டோ ரெளியர் சிற்றில் சார்ந்தனனென் றிகழுமின்னே சிற்றில்லா லவரருகே தங்கப் பெற்றேன் சேர்ந்தமிடி யாலவர்தம் பணியாவும் என்கையாற் செய்யப் பெற்றேன் பாந்தவமீ தின்றியெந்தை அன்னையைவே றாக்குநிதி பாழ்த்த தன்றோ. |
|
| பெருமை மிக்க தந்தை தாயாரைத், தோழியரை, ஈன்றார் பேரில்லை விட்டு ஓர் எளியாருடைய சிறிய வீட்டைச் சார்ந்தேன் என்று குறை சொல்லும் தோழியே! சிறு வீடாக இருப்பதால் எப்பொழுதும் அவரருகிலேயே தங்கியிருக்கின்றேன். வறுமையினால் கணவனுக்கு வேண்டும் எல்லாப் பணிகளும் யானே என் |