| நீதிநூல் |
| கையால்செய்கின்றேன். இவையே சிறந்த தவமாகும். பேரில்லும் பெரும்பொருளும் உடைத்தாயிருப்பதால் எந்தையும் எம்மன்னையும் எப்பொழுதும் ஒன்றாக இருக்க இயலவில்லை. வேறுபடுத்திப் பயனில்லாமல் செய்யும் பொருள் சிறந்ததா? |
| ஏந்தல்-பெருமை. கோயில்-பேரில்; மாளிகை. மிடி-வறுமை. பா-அழகு; சிறப்பு. பாழ்தல்-பயனில்லாமற் போதல். |
| 14 |
| துணைவனுடன் வாழ்வதே சொல்லொணாப் பேரின்பம் |
123 | முதல்வியிவ டுணைவனே தெய்வமென்றா ளவன்சிற்றில் மோக்க மென்றாள் அதிலவனோ டுறைதல்சா லோகசா மீபமென்றாள் அவன்கை தீண்டி, மதமொடுமே யடித்தல்சா ரூபசாயுச் சியமென்றாள் மயற்பேய் கொண்டாள் பதவியெலா மீன்றோர்பா லிருக்கநண்ப னொடுமெலிந்தாள் பசிநோ யுற்றே... |
|
| பெற்றோர் வீட்டில் எல்லா நலங்களுமிருக்கத் துணைவனுடன் கூடிவாழ்தலால் மெலிவும் பசியும் எய்திய தலைவியானவள் தன் துணைவனே தெய்வம்; அவன் வாழும் சிறு வீடே பேரின்பப் பெருவீடு. அவ்வீட்டில் அவனுடன் ஒற்றித்து வாழ்வதே சாலோக சாமீபம். அவன் கையைப் பற்றி மகிழ்ச்சியோடு இன்புறுவதே சாரூப சாயுச்சியம்; என்று மயங்குங் கொள்கையளானாள். |
| மதம்-மகிழ்வு. அடித்தல்-இன்புறுல், விளையாடல். மயல்-மயக்கம். |
| 15 |
| வேறு |
| காரிகைசெய் அழகெலாம் கணவன் கண்டுவக்க |
124 | உண்ணல்பூச் சூடனெஞ் சுவத்த லொப்பனை பண்ணலெல் லாமவர் பார்க்க வேயன்றோ அண்ணறன் பிரிவினை யறிந்துந் தோழிநீ மண்ணவந் தனையிது மடமை யாகுமே. |
|