| | கணவ மனைவியரியல்பு |
| | தோழீ! உண்டல் பூச்சூடல் மனமகிழ்தல் அழகு செய்தல் முதலியன துணைவன் கண்டு களிப்பதற்கே. அவன் இல்லாதபோழ்து எனக்கு அழகு செய்யவருகின்றனையே, அஃது அறிவுடைமையாகுமா? |
| | ஒப்பனை-அழகு. அண்ணல்-வாழ்க்கைத்துணைவன்; கணவன். மண்ணல்-அழகு செய்தல். |
| | 16 |
| | மனைமுகத் தாமரை மலரும் கணவனால் |
| 125 | கதிரவ னனையதங் கணவ ரேர்முகம் எதிருற மலருமற் றேதி லார்முக மதியநோக் கிடவிதழ் வாடிக் கூம்புமால் சதியர்வாண் முகமெனுஞ் சலசப் பூவரோ. |
|
| | மனைவியர் முகமாகிய தாமரை கணவர் முகமாகிய அழகிய கதிரவனைக் கண்டுதான் மலரும். அயலார் முகமாகிய திங்களைக் கண்டு குவியும். |
| | சதி-மனைவி; கற்புடையவள். வாள்-ஒளி. சலசப்பூ-தாமரை. |
| | 17 |
| | அரசும் அரசுறுப்பும் ஆம்நற் கணவனே |
| 126 | மிடியுளார் கேள்வரென் றுரைத்த மின்னனாய் கடிநகர் சிறுகுடில் காந்தர் வேந்தராம் அடியளே குடியவ ரன்பெண் செல்வமாங் குடியிறை யென்னிறை குறையுண் டோசொலாய். |
|
| | கணவர் வறுமை யுள்ளவர் என்று சொல்லும் தோழியே! அவருடைய சிறு வீடே சிறந்த அரண்மனை. அவரே அரசர்க்கரசர். அடியாளாகிய யானே குடி. அவர் அன்பே எண்பெரும் செல்வம். என்னுடைய கற்பே அவர்க்கு நல்கும் வரி. வேந்தற்கு வேண்டியவற்றுள் வேறென் குறைவுண்டு சொல்லாய். |
| | மிடி-வறுமை. கடி-சிறப்பு. நகர்-அரண்மனை. இறை-வரி. நிறை-கற்பு. வேந்தன்-மன்னர் மன்னன். |
| | 18 |
| | கணவனுறை நெஞ்சில்வேறு கருத இடம் ஏது |
| 127 | தோழிகேளுனக்குமோர் துணைவ னுண்டவன் வாழித யத்தினான் மற்ற மாதரைப் பாழினினினைக்கின்றாய் பாவி நெஞ்சுனக்கு ஆழிசூ ழுலகினில் அனந்த மேசொலாய். |
|
| | நீ.-5 |