| | கணவ மனைவியரியல்பு |
| | தலைவன் பின் தூதாய்த் தலைவியுயிர் சாரும் |
| 130 | தினைவினை செயவகல் செல்வ முன்னந்தூது அனம்வரும் அதினொடும் அடைகி லாயெனின் மனம்வரும் உயிர்வரும் வராத மெய்விலங்கு இனமுறு வனமுறும் இனம்வ ருந்தவே. |
|
| | நாள்தோறும் செய்யும் முயற்சிக் (பொருள்ஈட்டுதல்)காகச் செல்லும் தலைவ! (நீ சென்றால்) முதல் முதல் அன்னந்தூதாக வரும். அவ்வன்னத்துடன் நீ வராவிட்டால் என் நெஞ்சும் வரும்; உயிர்வரும். ஆனால், வர இயலாத உடம்பு நரி முதலிய விலங்கினஞ் சாரும் சுடுகாட்டையும். உறவினர் வருந்துவர். |
| | தினவினை-நாள்முயற்சி. அனம்-அன்னம் (அனம் இடைக்குறை). மெய்-உடம்பு. வனம்-சுடுகாடு. இனம்-உறவினர். |
| | 22 |
| | வேறு |
| | மணமகன் உடலுயிர் மனைவியின் உடைமை |
| 131 | இந்த வுடலுள மைம்பொறி யின்னுயிர் யாவுமணஞ் செயும் அந்தநன் னாளினில் இல்லவட் கன்போ டளித்தனன் யான்பொதுப் பைந்தொடி யேயுனைச் சேர்ந்திடப் பாரி லெனக் குடல் வேறிலை சிந்தை புலன்களும் வேறிலை சீவனும் வேறிலை செல்வையே. |
|
| | பொதுமகளே! உன்னைச் சேர உடல் உள்ளம் ஐம்புலன் உயிர் எனக்கு வேறில்லை. ஏனென்றால், மணஞ் செய்த காலத்து அவையாவும் மனையவட்கு அளித்துவிட்டேன். |
| | சிந்தை-உள்ளம். |
| | 23 |
| | *கண்டுகேட். திருக்குறள். 1101 |