| | நீதிநூல் |
| | வேறு |
| | நெடுவழித் துன்பெலாம் நீங்கலவர் புன்னகையால் |
| 132 | அந்தநாள் நடந்திலாத யானகன்ற நெடுவழி எந்தவாறு சென்றதென்ன எனைவினவு சிலதிகேள் பந்தவூர்தி யேறியே படர்ந்தனன் படர்ந்தநாள் வந்தபீழை யாவும் அன்பர் மந்தகாசந் தீர்ந்ததே. |
|
| | தோழி! நடக்க அறியாத யான் நெடுவழியை எப்படி நடந்தேனென்று வினவுகின்றாய். காதலாகிய வண்டி ஏறி நடந்தேன். நடந்ததால் ஏற்பட்ட துன்பமுற்றும் காதலர் புன்னகையால் நீங்கிற்று. |
| | சிலதி-தோழி. பந்தம்-காதல். ஊர்தி-வண்டி. படர்தல்-நடத்தல். பீழை-துன்பம். மந்தகாசம்-புன்னகை. |
| | 24 |
| | அருவொப்புக் கழுதவள் உருவப்பேர்க் குயிர்விடும் |
| 133 | திருவனா யெனப்புகழ்ந்து தேவியை விளிக்கமா மருமலர் துறந்துநெஞ்சின் வாழ்ந்ததென்னென் றழுதனள் அருவமாதை யொப்புரைக்க வழுதுவாடு நங்கையாம் உருவமாதர் பெயருரைக்கி னுயிர்துறப்பள் நெஞ்சமே. |
|
| | நெஞ்சே! திருமகளை ஒப்பாய் என்று மனைவியைப் புகழ்ந்து அழைத்தேன். அவள், செந்தாமரையை விட்டுத் திருமகள் உம்முடைய நெஞ்சில் எப்படி வாழ்ந்தாள், என்று அழுதாள். அருவ மாதரை ஒப்பாய் என்னும் சொல்லையே பொறாதவள், உருவுடைப் பெண் பெயரைச் சொன்னால் திட்டமாக வுயிரைத் துறப்பள். |
| | | திரு-திருமகள் (இலக்குமி). தேவி-மனைவி. விளிக்க-அழைக்க. மா-திருமகள். மலர்-தாமரை. |
|
| | 25 |
| | கணவனல்லா ஆண்களைக் காணக்கண் ணிலாள்மனை |
| 134 | பூணலங்கன் மார்பினாரை யன்றிவேறு புருடனைக் காணநோக்கி லேனினைந்து கழறநெஞ்சு வாயிலேன் பாணவேறு பொறியிலேனை நடனம்பார்க்க வாவெனா நாணமின்றி யேயுரைத்த நண்பர்வம்ப ரேகொலாம். |
|