பக்கம் எண் :

69

  கணவ மனைவியரியல்பு
 
  பாணனே! தலைவனையன்றி வேறு ஆண்களைக் காணக் கண்ணிலேன்; நினைக்க நெஞ்சிலேன்; பேசவாயிலேன்; வேறு பொறியில்லாத என்னைக் கூத்துக் காண அழைக்கும் தலைவர் நாணமில்லாத வம்பராவர்.
 

26

  வேறு
  சீரிய கற்பால் சித்திரமும் பாரார்
135
ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திட ஆண் சித்திரமேல் நான்பாரேன்
பாவையர்தம் உருவெனின்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்.
  சுவரின்கண் எழுதப்பட்ட சித்திரத்தைப் பார்க்கவேண்டுமென்று யான் மனைவியை அழைத்தேன். அவள், `ஆண் ஓவியமானால் நான் பாரேன்; பெண் உருவ மென்றால் நீர் பார்க்க யான் மனம் பொறுக்கமாட்டேன்,ழு என்று கூறினாள். அவளுடைய கற்பு மலைபோன்ற திண்மையுடையது.
  ஓவியர்-சித்திரம் எழுதுவோர். ஓவியம்-சித்திரம். கண்ணுறுவான்-பார்க்கும் பொருட்டு, காவி-நீல மலர், வெற்பு-மலை.
 

27

  அன்பர்பொருட் ககலுதலால் அக்காளென் பதுதகும்
136
திருவென்ன வெனைநினையார் சீர்கேடி யெனநினைந்து
பொருள்வயினே கிடச்சீவன் போல்வாரே யுன்னுதலால்
ஒருதரமோ பலதரநீ ஓஅக்காள் அக்காளென்று
இருவினையேன் றனையழைத்த விழுக்கன்று பைங்கிளியே.
 
பசுங்கிளியே! உயிர் போன்ற காதலர் என்னைத் திருமகள் என்று நினையாமல், அவளுக்கு மூத்தவளாகிய மூதேவி யென்று கருதிப் பொருள் தேடச்செல்ல நினைக்கின்றார். அதனால் நீ கொடுவினையேனை அக்காள் அக்காள் என்று, பலமுறை அழைப்பனால் குற்றம் ஒன்றும் இல்லை.
  திரு-திருமகள். பொருளருளும் தெய்வம். சீர்கேடி-தேவி. உன்னுதல்-நினைத்தல், அக்காள்-மூதேவி, இருவினை-காடுவினை.
  28