பக்கம் எண் :

75

 கணவ மனைவியரியல்பு
 
 துணைவர்-தலைவர். இறைவி-தலைவி. ஐயம்-தடை; துணிவின்மை (சந்தேகம்). பெருமகன்-தலைவன். தருமம்-அறம். சதி-தலைவி.
 

40

 வேறு
 மனையவள் நகைப்பஞ்சிவாள் வெல்லலே வலிமை
149
வினையில் வென்றியி லாதிங்கு மீண்டதற்கு
இனன்மு னிந்திடு மென்றஞ்சி லேம்வசை
தனையு மென்னிலந் தாரந் திறலிலேம்
எனந கிற்செய்வ தென்சொ லிதயமே.
 நெஞ்சே! முயற்சியில் வெற்றிபெறாது இங்கு மீண்டதற்கு உறவினர் வெறுப்பார் என்று அஞ்சிலேன். உலகோர் கூறும் பழியையும் கருதிலேன். மனையவள் வலிமையில்லாதவன் என இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்தால் என் செய்வது? சொல்வாயாக.
 வினை-முயற்சி. இனன்-உறவினன், தாரம்-மனைவி, நகின்-சிரித்தால்.
 

41

 எப்பெருந் துன்பும் ஏகும் மனைநோக்கால்
150
இரிஞ ராலுறும் எவ்வமுந் தேகமார்
பெரிய புண்களும் பேசருந் துன்பமும்
உரிமை வாண்முக நோக்க வொழிதலாற்
பிரியை நோக்கம் பெருமருந் தாமரோ.
 பகைவர்களால் ஏற்படும் துன்பமும், போரில், உடம்பில் ஏற்படும் பெரிய புண்களும், அதனாலுண்டாகும் இடும்பையும் கற்பு நிறை காதலியின் அன்புப் பார்வையால் நீங்குகின்றன. ஆயின், காதலியின் நோக்கம் துன்பம் நீக்கும் சிறந்த மருந்தாம் என்க.
 இரிஞர்-பகைவர். எவ்வம்-துன்பம். உரிமை-காதலி; மனைவி. பிரியை-காதலி.
 

42

 

இல்லவள் முகத்துக்கு ஈடின்று திங்களும்

151
எழிலி லாளில் லவளெனும் வேசிதேன்
மொழிமு கத்தை மதியைமுன் னான்முகன்
சுழித ராசினிற் றூக்கத்தட் டோடும்பர்
எழுநி சாபதி யின்னுமிங் கெய்திலான்.