| கணவ மனைவியரியல்பு |
| அகமென்மை மாதரை அருளொடும் காக்க |
154 | மென்மை யாகும் விழிமுதல் யாவையும் நன்மை யாவிட ரின்றிநன் கோம்பல்போல் வன்மை யின்மட மாதர்கள் பாற்கொடுந் தன்மை யின்றித் தயையுற வேண்டுமால். |
|
| மென்தன்மையுடைய கண் நாக்கு மூக்கு காது முதலிய பொறிகளை நலம் பொருந்தக் கேடில்லாமல் செம்மையாகப் பாதுகாத்தல்போல், வன்மைகுறைந்து மென்மை மிகுந்துள்ள அடக்கம் வாய்ந்த பெண்களிடம் கொடுந்தன்மையின்றி அன்பிரக்கம் கொள்ளல் வேண்டும். |
| மென்மை-(அறிவுப் பொறியாகிய இயற்கை) மென்மை. ஓம்பல்-பாதுகாத்தல். மடம்-அடக்கம். தயை-இரக்கம். |
| 46 |
| வேறு |
| காதலர்க்கெம் மெலிவினைக் கதிர்க்காற்றே யுரைமின் |
155 | ஈண்டிவண் வருவலெனும் இறைவருகி லரவரைத் தீண்டிய கிரணமதால் தீண்டுதி யெனைவெயிலே தாண்டிய வளியவர்மெய் தடவியென் னுடல்படர்வாய் மீண்டில ரிடமெனது மெலிவினை யுரைமுகிலே. |
|
| `மேகம் தவழும் கார்காலத்து இங்கு வருவேன்,ழு என்று கூறிச் சென்ற தலைவர் வரவில்லை. ஞாயிறே! அவரைத் தீண்டிய கதிரால் என்னையும் தீண்டுகின்றாய். காற்றே! அவர்மேல் தழுவி என்மேலும் படர்கின்றாய்., கூறிய முறை தவிர்ந்து மீளாத தலைவரிடம் என் மெலிவினை நீவிர் கூறுமின். |
| முகில்-மேகம். இறைவர்-தலைவர். கிரணம்-கதிர். வெயில்-ஞாயிறு. வளி-காற்று. படர்தல்-படுதல். |
| 47 |
| வேறு |
| இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே |
156 | ஒருதருமற் றொருதருவி னுதவியின்றிக் காய்க்கும் உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் டாமோ இருமையின்றி யிருவருமே நம்மனைநம் பொருணம் மிகுளைநஞ்சேய் எனப்பொதுவி னியம்புரிமை யாலும் |
|