பக்கம் எண் :

80

 நீதி நூல்
 
 கும் பார்வை தெரியாதென்று கருதிப் பாலைக் களவுசெய்வதை யொக்கும்.
 ஒண்ணுதல்-அழகிய நெற்றியையுடைய பெண். கரவு-திருட்டு. பூசை-பூனை. விழி-கண். பயன்-பால்.
 

2

 கள்வர் சொல் ஒக்கும் கற்பிலார் சொல்லும்
160
அன்னிய ரெம்மியை பன்றிச் சேர்ந்தனர்
என்னமின் னிடையவர் இயம்பல் சோரர்கள்
பொன்னையாம் வவ்விலேம் பொருள்வந் தெங்களை
முன்னைவவ் வியதென மொழித லொக்குமே.
 மின்போலும் இடையையுடைய பெண்கள் அயலார் எங்களுடைய இணக்கமில்லாமல் எம்மைச் சேர்ந்துவிட்டனர் என்று சொல்லுதல், கள்வர் பொருளை யாங்கள் களவுசெய்யவில்லை அப்பொருள்களே எங்களை வலிய வந்து பற்றியது என்று சொல்லுவதை யொக்கும்.
 அன்னியர்-அயலார். இயைபு-இணக்கம். சோரர்-கள்வர். வவ்வியது-பற்றியது.
 

3

 அயலான் அன்புரையால் அழியுங் கற்பு
161
மணமகிழ் வாயயல் மைந்தர் தம்மொடுந்
தினமுரை யாடிடுந் தெரிவை கற்பது
புனலுறு முப்பினைப் போலு மென்மெழுகு
அனலுற லென்னவும் அழிவ துண்மையே.
 ஒரு பெண் நாள்தோறும் அயல் ஆண்களுடன் மனமகிழ உரையாடுவாளானால் அவள் கற்பு தண்ணீரைச் சார்ந்த உப்பும், தீயைச் சார்ந்த மெழுகும் அழிவனபோல் அழியும் என்பதாம்.
 

புனல்-தண்ணீர். அனல்-தீ.

  4
 

ஆடவன் செயலெலாம் ஆற்றல் பெண் பழிப்பாம்

162
வலதுகை துணைவனா மற்றொர் கைமனை
தலைவன்செய் தொழிலெலாந் தாரம் ஆற்றுதல்
தொலைவிலா வலக்கையின் தொழிலி டக்கர
நிலமிசைச் செய்தென நிந்தை மேவுமே.