பக்கம் எண் :

82

 நீதி நூல்
 
 

காமத்தீக்குச் சுள்ளி பரத்தையைக் காண்டல்

165
மின்னெரி மூட்டிடு விறகு போற்சுவைக்
கன்னலைப் பழித்தசொல் லாரைக் காணலுந்
துன்னலும் உன்னலுஞ் சுடுவெங் காமத்தீ
தன்னையே மூட்டிடுஞ் சமிதை போலுமே.
  கரும்பினும் இனிய சொல்லையுடைய பொதுமகளிரைப் பார்த்தலும் நெருங்கலும் நினைத்தலும் தீயை மூட்டும் விறகு போன்று உயிரையும் சுடும் கொடிய காமத்தீயை உண்டாக்கும் சுள்ளி ஆம்.
  மின்-ஒளி. கன்னல்-கரும்பு. துன்னல்-நெருங்கல். உன்னல்-நினைத்தல். சமிதை-சுள்ளி.
 

8

  பிறர்மனை சேர்வோர் பேருங்கே டுறுவர்
166
உணர்வறுஞ் செல்வமும் உயர்வு மேயறுங்
குணமறுங் குலமறுங் கொடிய நோயெலாம்
அணவுறு நரகுறு மாயுள் தேயுமால்
கணமறு மாதர்தோள் கலக்குந் தூர்த்தர்க்கே.
  கண்ணிமைப் பொழுதும் அயல் பெண்டிர் தோளைச் சேரும் காமுகருக்கு அறிவு கெடும்; பொருளும் மேன்மையும் நீங்கும்; நல்ல தன்மைகள் அழியும்; குடும்பம் ஒழியும்; கொடுமையான நோய்களெல்லாம் வந்து பொருந்தும். இருளுலகத் துன்பமும் எய்தும்; வாழ்நாளும் குன்றும்.
  அணவுறும்-பொருந்தும். கலத்தல்-சேர்தல். தூர்த்தர்-காமுகர்.
 

9

  வேறு
  கற்பிலார்க் காத்தல் களவின்பின் காத்தலாம்
167
உவந்து தன்னுளத் தோங்கிய கற்பிலாச்
சிவந்த வாயுடைச் சேயிழை யைப்பதி
இவர்ந்து சேமஞ்செய் தெய்க்குதல் பட்டிகள்
கவர்ந்த பின்பொருட் காவலை யொக்குமே.
  மனமகிழ்ந்து தன் நெஞ்சத்து உறுதியாகிய கற்பிலாச்சிவந்த வாயையுடைய பெண்ணை, அவள் கணவன் விரும்பி (மக்களாலும்