| | நீதி நூல் |
| | காமத்தீக்குச் சுள்ளி பரத்தையைக் காண்டல் |
| 165 | மின்னெரி மூட்டிடு விறகு போற்சுவைக் கன்னலைப் பழித்தசொல் லாரைக் காணலுந் துன்னலும் உன்னலுஞ் சுடுவெங் காமத்தீ தன்னையே மூட்டிடுஞ் சமிதை போலுமே. |
|
| | கரும்பினும் இனிய சொல்லையுடைய பொதுமகளிரைப் பார்த்தலும் நெருங்கலும் நினைத்தலும் தீயை மூட்டும் விறகு போன்று உயிரையும் சுடும் கொடிய காமத்தீயை உண்டாக்கும் சுள்ளி ஆம். |
| | மின்-ஒளி. கன்னல்-கரும்பு. துன்னல்-நெருங்கல். உன்னல்-நினைத்தல். சமிதை-சுள்ளி. |
| | 8 |
| | பிறர்மனை சேர்வோர் பேருங்கே டுறுவர் |
| 166 | உணர்வறுஞ் செல்வமும் உயர்வு மேயறுங் குணமறுங் குலமறுங் கொடிய நோயெலாம் அணவுறு நரகுறு மாயுள் தேயுமால் கணமறு மாதர்தோள் கலக்குந் தூர்த்தர்க்கே. |
|
| | கண்ணிமைப் பொழுதும் அயல் பெண்டிர் தோளைச் சேரும் காமுகருக்கு அறிவு கெடும்; பொருளும் மேன்மையும் நீங்கும்; நல்ல தன்மைகள் அழியும்; குடும்பம் ஒழியும்; கொடுமையான நோய்களெல்லாம் வந்து பொருந்தும். இருளுலகத் துன்பமும் எய்தும்; வாழ்நாளும் குன்றும். |
| | அணவுறும்-பொருந்தும். கலத்தல்-சேர்தல். தூர்த்தர்-காமுகர். |
| | 9 |
| | வேறு |
| | கற்பிலார்க் காத்தல் களவின்பின் காத்தலாம் |
| 167 | உவந்து தன்னுளத் தோங்கிய கற்பிலாச் சிவந்த வாயுடைச் சேயிழை யைப்பதி இவர்ந்து சேமஞ்செய் தெய்க்குதல் பட்டிகள் கவர்ந்த பின்பொருட் காவலை யொக்குமே. |
|
| | மனமகிழ்ந்து தன் நெஞ்சத்து உறுதியாகிய கற்பிலாச்சிவந்த வாயையுடைய பெண்ணை, அவள் கணவன் விரும்பி (மக்களாலும் |