பக்கம் எண் :

83

  பரத்தைமை
 
  மதிலாலும்) காத்து வருந்துதல், கள்வர்கள் செல்வப் பொருள்களைக் களவு செய்தபின் (அப்பொருள்களிருப்பனவாக நினைத்து) காத்துக்கொண்டிருக்கும் அறியாமையை ஒக்கும்.
  சேயிழை-சிவந்த அணிகலனையுடைய பெண். பதி-கணவன். இவர்ந்து-விரும்பி. சேமம்-காவல். எய்க்குதல்-வருந்துதல். பட்டிகள்-கள்வர். கவர்ந்த-களவு செய்த.
 

10

  கற்பிலார்க் கெதிராமை கடன்சேர் வெற்றி
168
ஓயப் பாரில் உறுந்தெவ்வர் தம்மொடும்
ஏயப் போரி லெதிர்ந்திட வென்றியாம்
மாயப் போர்செய் மடந்தையர்க் குப்புறம்
ஆயப் பாற்செல வென்றி யமையுமே.
  உலகில் பகைமை அழியப் பகைவர்களுடன் சண்டையில் பொருந்தி எதிர்தல் வெற்றியாகும். கற்பிலாத பெண்கள் செய்யும் மயக்கமாகிய தீயசண்டையில் அவர்க்குத் தோற்று அப்பாற் செல்லல் வெற்றியாகும்.
  ஓய்தல்-அழிதல். பார்-உலகம். தெவ்வர்-பகைவர். மாயம்-மயக்கம்.
 

11

  வேறு
  பிறனைச் சேர்வாள் பெரும்பழி சேர்வாள்
169
கொழுந னறியில் உயிர்க்கொலையாங்
    கோவாக் கினையாம் பெரும்பழியாம்
அழல்போ னெஞ்சைச் சுடும்பயத்தோ
    டயலா டவரை யொருபேதை
தழுவி யின்ப முறல்மதமா
    தானுண் டகல்வா யிடையொழுகுங்
கழையின் சாற்றை விழைந்ததன்பாற்
    கடுகி நக்க லேய்க்குமால்.
  நெஞ்சைத் தீப்போல் சுடும் அச்சத்துடன் ஒரு பெண் அயலானைச் சேர்தலைக் கணவன் அறிந்தால் உயிர்க்கொலை நேரும். மன்னன் அறிந்தால் கடுந்தண்டனை யுண்டாம். (உலகோரறிந்