| | பரத்தைமை |
| | பல பெண்களைச் சேர்வது காணும் மனைவி, தானும் பல ஆண்களைச் சேர்வதற்குக் கணவன் வெளியே போகும் நேரத்தை எதிர்பார்த்திருப்பாள். |
| | 14 |
| | அயலான் மனையன்னை அரும்பிறப் பாவாள் |
| 172 | தன்னைப்போற் பிறரை யெண்ணல் தகுதியாந் தான்ம ணந்த மின்னைப்போ லிடையி னாளை விழியினால் நோக்கு வோரைத் தின்னல்போன் முனிவு கொள்வோர் அயலவன் தேவி தன்னை அன்னைசோ தரிபோ லெண்ணா தணைந்திட விரும்ப லென்னே. |
|
| | ஒருவன் தன்னைப்போல் பிறரை நினைப்பது நடுவு நிலையாம். தான் கலியாணஞ் செய்துகொண்ட மின்போலும் இடையினையுடைய மனைவியை வேறொருவன் கண்ணால் பார்த்தாலும் குற்றமென்று அவனைக் கொல்லத்தக்க சினங்கொள்வோன், அயலவன் மனைவியைத் தாயைப்போலவும் உடன்பிறப்புப் போலவும் கருதாமல் முறைகடந்து கூட ஆசைப்படுவது என்ன கொடுமை? |
| | தகுதி-நடுநிலைமை. தின்னல்-ஈண்டுக் கொல்லல். முனிவு-சுனம். தேவி-மனைவி. சோதரி-உடன்பிறப்பி. |
| | 15 |
| | பரத்தைமைச் செயல்கள் பலவாம் என்ப |
| 173 | விதவையைக் கன்னி தன்னை வேசையைப் பிறனில்லாளை இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண்பு ணர்ச்சி மதனநூ லாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை விதவிதந் தானே செய்தல் விபசார வினைகளாமே. |
|
| | கைம்பெண் மணமாகாதபெண் பரத்தை அயலான் மனைவி இவர்களை அன்புடன் சேர்தலும், சேரவிரும்புதலும், ஆண் சேர்க்கையும், காமநூலைக் கேட்டலும், படித்தலும், ஒவ்வாச்செய்கை பலவகையாகத்தானே செய்தலும் பரத்தைமைச் செயல்களாம். |