| உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் |
| தோர் உயர்ந்தோர் என்று பாகுபடுத்திக் கூறுவது உண்மை அல்லாத வெளி மயக்கமே ஆகும். |
| கடலுடுத்த-கடல் சூழ்ந்த. பார்-உலகம். |
| 10 |
| அறவோரைத் தக்கோர் அனைவருந் தாங்குவர் |
185 | அமலனே எவர்க்குங் கத்தன் அவற்கர சருமில் லாருஞ் சமமலாற் பேத மில்லை தரித்திரர் அறத்தோ ராயின் அமரரா குவரன் னார்தாள் பொடியையும் அரச ரொவ்வார் தமரெனத் தாழ்ந்தோர் தம்மைத் தகையினர் தாங்கு வாரால். |
|
| மாசற்ற கடவுளே எல்லோருக்கும் முதல்வராவர். அவருக்கு அரசரும் வறியரும் ஒன்றேயன்றி வேறுபாடின்று. வறியவர் நன்மையுடையவரானால் தேவராவார். அவர்களுடைய காலிற் பட்ட துகளுக்கும் அரசர் ஒப்பாகமாட்டார். நற்பண்புள்ளவர் வறியவரைத் தம்மவர்களே என்று காப்பாற்றுவார். |
| அமலன்-மாசற்றவன், கடவுள். சமம்-ஒப்பு. பேதம்-வேறுபாடு. |
| 11 |
| பகலவன்போற் செல்வர் பலர்க்கும் பயனாவர் |
186 | சுடரவன் விளங்கிற் பூமி சோதியாம் விளங்கி லானேற் புடவியு மிருளா மன்ன வாறுபோல் திருவோர் செல்லு நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரைமே லேற்றும் அடர்சுடர் விளக்கிற் செல்வ ரறத்தராய்ச் சிறத்தல் நன்றே. |
|
| ஞாயிறு விளங்குமானால் நிலமும் ஒளியுடன் விளங்கும். அது விளங்காவிட்டால் நிலமும் இருளாய் இருக்கும். அதுபோல் செல்வர் நடக்கும் வழியில் அவர்கள் விளக்கத்தில் வறியவர்களும் நடக்கின்றார்கள். ஆதலால், செல்வர்கள் மலைமேலிட்ட பெருவிளக்குபோல் எல்லோருக்கும் நன்மை செய்பவராய் மேன்மை எய்துதல் நன்று. |
| சுடரவன்-ஞாயிறு. சோதி-ஒளி. நடவை-வழி. வரை-மலை. சிறத்தல்-மேன்மை எய்துதல். |
| 12 |