| நீதி நூல் |
| வறியவர்போல் துன்பெலாம் வருமே செல்வர்க்கும் |
187 | தாழ்ந்தவ ரெனச்செல் வர்க்கும் சாப்பிணி மடமை யச்சஞ் சூழ்ந்தபே ரிடர்கள் பாவந் துஞ்சிமண் ணாத லள்ளல் வீழ்ந்தவ லித்த லாதி மிகையெலாம் எய்தும் இவ்வாறு ஆழ்ந்தவ் விருதி றத்தார்க் காகும்வேற் றுமையா தம்மா. |
|
| தாழ்ந்தவரைப்போலவே செல்வர்க்கும் உடல்நோய், அறியாமை, நடுக்கம், துன்பங்கள், பாவம், இறப்பு, இருளுலகத் துன்பம் முதலிய தண்டனைகள் உண்டாகும். இவ்வகையான் (துன்பத்து) அழுந்திய இருவகையானவர்க்குள்ளும் உண்டாகும் வேற்றுமை யாது? |
| சடம்-உடல். மடமை-அறியாமை. இடர்-துன்பம். துஞ்சி-இறந்து. அள்ளல்-இருளுலகம் (நரகம்). அவலித்தல்-துன்புறல். மிகை-தண்டனை. |
| 13 |
| சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம் |
188 | பதிமுத லதிகா ரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர் மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம் விதிவழி யொழுகித் தம்மை மேவுறு தாழ்ந்தோர் தம்மை அதிதயை யொடுநன் கோம்பி யாண்டிடக் கடனா மாதோ. |
|
| நாடாள் மன்னர். அந்தணர், வேளாளர் எனப்படும் சிறந்தோர், வணிகர், உயிர் நோயாகிய அறியாமையை அகற்றும் நூலாசிரியர், உடல் நோய் தீர்க்கும் மருத்துவர் முதலியோர் தங்கள் தங்களுக்குரிய முறைதவிராமல் நடந்து தம்மைச் சார்ந்து வாழும் தாழ்ந்தோரை மிக்க பரிவுடன் பாதுகாத்துப் பேணுதல் கடமையாம் |
| பதி-நாடு. பண்ணவர்-அந்தணர்; முனிவர். உழவர்-வேளாளர். பரதர்-வணிகர். அதிதயை-மிக்க பரிவு. |
| 14 |