பக்கம் எண் :

94

  நீதி நூல்
 
  குடிகள், மாணாக்கர், வீட்டுவேலை செய்வோர், தச்சர், நாவிதர், வண்ணார், வேலையாட்கள் முதலிய பல தொழிலாளர்கள் எல்லோரும், தம்மை ஆதரித்து ஆளும்பொருட்டு அழியாக் காப்பணிந்து முன்வரும் உயர்ந்தோர் சொல்லுக்கு அடங்கித் தாம் செய்யும் பெருமை மிக்க தொழிலெலாம் வஞ்சமின்றிச் செய்தால் இம்மையின்பமும் மறுமையின்பமும் எளிதாகா அடைவர்.
  காழியர்-வண்ணார். ஆளுபாக்கு-ஆளும்பொருட்டு. குடிலம்-வஞ்சனை. மாது-பெருமை.
 

2

  உணவு தருவோர்க்கே உடம்பு பொருளாம்
191
ஐயன தருளான் மெய்மை யனைதந்தை யீந்தா ரம்மெய்
உய்யவூண் யசமா னன்றான் உதவலா லவற்கே தம்மெய்
ஐயமில் பொருளென் றுன்னி யன்பொடு மேவ லாளர்
மையறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ.
  கடவுள் அருளால் உடம்பை அன்னையும் அத்தனும் ஈந்தனர். அவ்வுடம்புக்கு வேண்டும் உணவை வேலை வாங்குகின்றவர் (முதலாளி) தருகின்றனர். ஆதலால். வேலை செய்கின்றவர்கள் தம் உடம்பு, உணவு தரும் முதலாளிமாருக்கு உடைமையென்று கருதி உண்மையான அன்புடன் உழைக்கவேண்டும்.
  மெய்-உடம்பு. பொருள்-உடைமை. புரிவர்-விரும்பிச் செய்வர்.
 

3

  இணங்காத் தலைவனைவிட் டேகல் நன்று
192
தலைவன்றீ யவனே லன்னான்
    தனைவிடுத் தேகல் நன்றாம்
விலைதரு மவன்பால் வைகி
    விரவுறுங் காறுஞ் சேடர்
உலைவில்தம் வாழ்நா ளன்னாற்
    குரியதென் றுனிய வன்சொல்
நிலையுறப் பணிகள் செய்து
    நெறிவழி நிற்றல் சீரே.