பக்கம் எண் :

95

  தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல்
 
  முதலாளி நல்லவனாக இல்லாவிட்டால் அவனைவிட்டு விலகிவிடுதல் நல்லது. கூலிதரும் அவனோடு இருக்கும்வரையும் தன் வாழ்நாள் அவனுக்குரியதென்று கருதி அவன் சொல்வழி ஏவல் செய்வது முறை.
  தலைவன்-முதலாளி. விலை-கூலி. சேடர்-வேலையாளர். உனி-கருதி.
 

4

  எல்லா நலமும் இயைந்தவர் ஏவலர்
193
அறநெறி யலாத செய்கை யாண்டகை சொல்லிற் கேளார்
புறமுற வவன்குற் றத்தைப் புகன்றிடார் பொய்க ரத்தன்
மறமிலா ரவனை யன்னை தந்தைபோன் மதிக்கும் நீரார்
இறவிலாக் கடவுள் வாழும் இதயத்தார் சேட ரம்மா.
  தலைவர் முறையல்லன கூறின், அதனைக் கேளார். தலைவர் குற்றத்தை யாரிடமும் சொல்லார். பொய், மறைப்பு, முதலிய தீமையில்லார். தலைவரைத் தாய்தந்தைபோல் எண்ணுந் தன்மையர், என்றும் அழியா இறைவன் நின்று நிலவு நெஞ்சினர், வேலையாட்கள்.
  ஆண்டகை-தலைவன். கரப்பு-மறைப்பு. சேடர்-வேலையாட்கள்.
 

5

  தலைவன் பகைநண்பு தமக்கும் பகைநண்பே
194
அண்ணல்தன் தமரை யண்ணல்
    என்னவும் அவனொன் னாரை
நண்ணல ரெனவு மன்னான்
    நண்பரை யினிய ரென்றும்
எண்ணற வன்னோன் கொண்ட
    பொருளெலாஞ் சீவ னென்றும்
திண்ணமா வெண்ணிப் போற்றுஞ்
    சேடர்விண் ணாட ராவார்.
  தலைவன் சுற்றத்தாரைத் தம் தலைவனே யெனவும், அவன் பகைவரைத் தம் பகைவரெனவும், அவன் நண்பரை இனியரெனவும், அவனுடைய அளவில்லாத பொருளெல்லாம் தம்