பக்கம் எண் :

96

  நீதி நூல்
 
  உயிரே எனவும் உறுதியாகக் கருதிப் பேணும் வேலையாட்கள் மறுமை இன்பம் எய்துவர்.
  அண்ணல்-தலைவன். தமர்-சுற்றத்தார். நண்ணலர்-பகைவர்.
 

6

  குறிப்பின்வழி யியற்றுங் குணமிக்கான் ஏவலன்
195
நாவியல் உணவில்ஏனை நல்வினை களில்நம் பிக்கு
மேவிய விருப்பி னோடும் வெறுப்பினற் குறிப்ப றிந்து
தாவிய லாது தக்க ததியில்யா வுஞ்செய் சேடர்
ஆவியோ விழியோ எய்தற் கரும்பொனோ மணியோ யாதோ.
  நாவுக்குச் சுவையான உணவு, வேண்டும் நன்மைகள் முதலியவற்றைத் தலைவனுக்குச் செய்யும்பொழுது தலைவனது விருப்பு வெறுப்பாகிய நிலை அறிந்து உற்றநேரத்துக்குறைவின்றி எல்லாம் செய்யும் வேலையாட்களை உயிரெனவோ கண்ணனெனவோ பொன்னெனவோ மணியெனவோ என்ன எனக் கூறுவது?
  நம்பி-தலைவன். தா-குறைவு. ததி-உற்ற நேரம்.
 

7

  அதி. 15-பொய்
  மெய்யே உரைக்கின் மேவா இடர்கள்
196
முன்னமோர் பொய்யுரைக்க வப்பொய்வெளி
    யாகாமல் மூடும் வண்ணம்
பின்னுமோர் பொய்யுரைக்க வதையுநிலை
    நிறுத்துவோர் பெரும்பொய் சொல்ல
இன்னவகை கைதவமொன் றிருநூறு
    கைதவத்துக் கிடமாம் வாய்மை
தன்னையே முன்பகரிற் சங்கடமொன்
    றிலையதுவே தகைமை நெஞ்சே.
  முதற்கண் சொன்ன பொய் வெளியாகாமல் மறையும்படி பல பொய் சொல்லல் நேரிடுகின்றது. இதனால், ஒரு பொய் சொல்லுதல் ஒரு நூறு பொய் சொல்லுவதற்கு இடமாகின்றது