| பொய் |
| மெய்சொல்லின் நெஞ்சமே, எவ்வகையான துன்பமும் நேரிடாது. |
| கைதவம்-பொய். |
| 1 |
| பொல்லாங்கு எவைக்கும் பொய்யே பிறப்பிடம் |
197 | இழுதைசொல்லி மறைக்கலா மெனுந்திடத்தாற் பாதகங்க ளெல்லாந் தீயர் பொழுதெலாம் புரிதலாற் குற்றங்கள் யாவுக்கும் பொய்பி தாவாம் வழுதொன்றை நீக்கிடிற்றீ வினைகளெலா நீங்கிடுநல் வண்மை யொன்றே முழுதுமுண ரறிஞர்க்குத் தோழனா மவர்க்கதனான் மோச முண்டோ. |
|
| பொய் சொல்லி மறைக்கலாமென்ற திடத்தால் தீயவர்கள் எப்பொழுதும் எல்லாப் பாவங்களும் செய்கின்றனர். அதனால், குற்றங்களுக்கெல்லாம் பிறப்பிடம் பொய் ஆகும். (கொடிய) பொய் ஒன்றை நீக்கிவிட்டால் தீமைகளெல்லாம் தாமே யகலும். மெய் ஒன்றே எல்லாமுணர்ந்த சான்றோர்க்கு நண்பனாகும். அதனால் அவர்களுக்குக் கேடு ஒன்றும் இன்று. |
| இழுதை-பொய். வழுது-பொய். வண்மை-மெய். |
| 2 |
| பொய்யர் மறந்துமெய் புகலினும் மதியார் |
198 | அங்கதமே பொருளென்னக் கைக்கொண்டோர் மறந்தொருமெய் யறைந்திட் டாலும் இங்கதனை யெவருநம்பார் துணைவியர்புத் திரர்தமரும் இகழ்ச்சி செய்வார் அங்கணுல கெங்கணுமே வசையாடி நரரெலாம் அகித ராவார் பங்கமுறும் பொய்யுரைப்பொய் யருஞ்சேரார் தம்முளமும் பழிக்கு மன்றோ. |
|
| நீ.-7 |