துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும், தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை இசையுங் கதலித் தண்டென இயம்பியும் நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடிபிடி யென்று சொல்லித் துதித்தும், | 15 |
| | |
மலமும் சலமும் வழும்புந் திரையும் அலையும் வயிற்றை ஆலிலை யென்றும், சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி | 20 |
| | |
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும், குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்; நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும் ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும் | 25 |
| | |
அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும், வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப் பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும், வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மலர் என்றும், | 30 |
| | |
அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும் கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும் தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் | 35 |
| | |
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும் உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும் கையும் எண்ணெயும் கலவாது ஒழியில் வெய்ய அதரும் பேனும் விளையத் | 40 |