அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற் சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப் பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே. | 8 |
| | |
கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. | 9 |
| | |
மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும் வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே. | 10 |
| | |
வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம் நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே. | 11 |
| | |
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே. | 12 |
| | |
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே. | 13 |
| | |
சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால் பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே. | 14 |
| | |
பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந் தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் | |