பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக் கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே. | 23 |
| | |
நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால் சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால் போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே. | 24 |
| | |
கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய் சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும் இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே. | 25 |
| | |
வானமுதத்தின் சுவையறி யாதவர்வண்கனியின் தானமுதத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே தேனமு தத்தின் தெளிவாயஞானஞ் சிறிது மில்லார்க்கு ஈனமுதச்சுவை நன்றல்ல வோகச்சி ஏகம்பனே. | 26 |
| | |
ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே. | 27 |
| | |
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. | 28 |
| | |
முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளைஓலை விளக்கியிட்டுப் பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல் இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவாகச்சி ஏகம்பனே. | 29 |
| | |
பிறந்துமண் மீதிற் பிணியேகுடி கொண்டு பேரின்பத்தை மறந்து சிற்றின்பத்தின் மேன்மைய லாகிப்புன் மாதருக்குட் | |