காலை உபாதி மலஞ்சலமாம் அன்றிக் கட்டுச்சியிற் சால உபாதி பசிதாகம் ஆகும்முன் சஞ்சிதிமாம் மாலை உபாதி துயில்காமமாம் இவை மாற்றிவிட்டே ஆலம் உகந்தருள் அம்பலவா, என்னை ஆண்டருளே! | 8 |
| | |
ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால் பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால் பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்; போயென்செய் வாய்மனமே பிணக் காடவர் போமிடமே? | 9 |
| | |
ஓடும் எடுத்து அதள் ஆடையும் சுற்றி, உலாவிமெள்ள வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போல் ஆடும் அருள்கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டிதன்னைத் தேடுங் கணக்கென்ன காண்! சிவகாம சவுந்தரியே. | 10 |
| | |
ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே! | 11 |
| | |
அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால் மடியாமல் செல்வ வரம்பெற லாம், வையம் ஏழளந்த நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள் குடிகாணும் நாங்கள்! அவர்காணும் எங்கள் குலதெய்வமே! | 12 |
| | |
தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே? மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே? கைவைத்த நாடக சாலையெங்கே? இது கண்மயக்கே! | 13 |
| | |
உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித்தொருவர் தம்மைக் கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக் கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று தடுப்பானும் நீயல்லையோ தில்லை ஆனந்தத் தாண்டவனே! | 14 |