பொன்னால் பிரயோசனம்பொன் படைத்தார்க்குண்டு; பொன் படைத்தோன் தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு அத்தன் மையைப்போல் உன்னால்பிர யோசனம் வேணதெல் லாம்உண்டு உனைப்பணியும் என்னால்பிர யோசனம் ஏதுண்டு? காளத்தி ஈச்சுரனே! | 2 |
| | |
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாதுசொன்ன சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டு செய்து நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? | 3 |
| | |
முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால் செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும் அப்போது கண்கலக் கப்படவும் வைத்தாய் ஐயனே! எப்போது காணவல் லேன்? திருக் காளத்தி ஈச்சுரனே! | 4 |
| | |
இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார் அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும் புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக் கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே! | 5 |
| | |
நாறும் குருதிச் சலதாரை; தோற்புரை நாள் தொறும்சீ ஊறும் மலக்குழி காமத்துவாரம் ஒளித்திடும்புண் தேறும் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு ஏறும் பதந்தருவாய்! திருக் காளத்தி ஈச்சுரனே! | 6 |
| | |
| திருக்கைலாயம் கான்சாயும் வெள்ளி மலைக்கரசே! - நின் கழல் நம்பினேன் ஊன்சாயும் சென்மம் ஒழித்திடு வாய்! கர வூரனுக்காய் மான்சாய செங்கை மழுவலஞ் சாய வனைந்த கொன்றைத் தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக் கொழுந்தே! | 1 |
| | |
இல்லம் துறந்து பசிவந்த போது அங்கு இரந்து தின்று பல்லும் கரையற்று, வெள்வாயு மாய்ஒன்றில் பற்றுமின்றிச் சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பாதென் றோ? கயி லாயத்தனே! | 2 |