சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த் தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே! | 3 |
| | |
கையார ஏற்றுநின் றுஅங்ஙனந் தின்று, கரித்துணியைத் தையா துஉடுத்தி, நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும் மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப ஐயா என்று ஓலம் இடுவது என்றோ? கயிலாயத்தனே! | 4 |
| | |
நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்து உளம் நெக்குநெக்குச் சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின்சீரடிக்கே மாறாத் தியானமுற்று ஆனந்த மேற்கொண்டு, மார்பில் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ? கயிலாயத்தனே! | 5 |
| | |
செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின் எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தே அல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே! | 6 |
| | |
மந்திக் குருளையொத் தேன்இல்லை; நாயேன் வழக்கறிந்தும் சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப் புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல் எந்தைக் குரியவன் காண் அத்த னே !கயி லாயத்தனே! | 7 |
| | |
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப் பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில் இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம் அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே! | 8 |
| | |
மதுரை விடப்படு மோ இப் பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம் திடப்படு மோ? நின் அருளின்றி யேதினமே அலையக் கடப்படு மோ? அற்பர் வாயிலில் சென் றுகண்ணீர் ததும்பிப் படப்படு மோ? சொக்க நாதா! சவுந்தர பாண்டியனே! | |