| 7. | வினைப்போகமே ஒரு தேகங்கண்டாய்! வினை தான் ஒழிந்தால் தினைப்போ தளவும் நில் லாதுகண்டாய்! சிவன் பாதம்நினை! நினைப்போரை மேவு; நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால் உனைப்போல் ஒருவருண்டோ மனமே எனக்கு உற்றவரே? |
| | |
| 8. | பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து, முட்டச் சுருட்டி என்மொய்குழ லாள்கையில் முன்கொடுத்து கட்டியிருந்த கனமாய்க்காரி தன் காமம் எல்லாம் விட்டுப் பிரியஎன் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே? |
| | |
| 9. | சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும், போதுற்ற பூசலுக்கு என்செய லாம்? செய்த புண்ணியத்தால் தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே? |
| | |
| 10. | வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்? காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே! |
| | |
| 11. | வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித்த வன்மொழி கேட்டிலையோ? செய்த புண்ணியத்தால் ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே! |
| | |
| 12. | மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை? தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம் தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே. |
| | |
| 13. | அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே! பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! |
| | |
| 14. | சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய் |