| 22. | என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே |
| | |
| 23. | திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்த பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன் கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை உருவாகிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே |
| | |
| 24. | விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன் கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும் எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே! |
| | |
| 25. | அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும் விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே. |
| | |
| 26. | எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே? |
| | |
| 27. | அண்ணல்தன் வீதி அரசிருப் பாகும் அணி படையோர் நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும் நண்ணும்இவ்வூர் துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமுமெல்லாம் எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே ! |
| | |
| 28. | என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்; பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்; உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே! |