| 29. | கரையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றிப் பொறை யுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும் தரையில் கிடப்பும் இரந்துண்ணும் ஓடும் சகமறியக் குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே. |
| | |
| 30. | எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. |
| | |
| 31. | வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண் பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச் சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப் பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே? |
| | |
| 32. | உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில் தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்துகொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே |
| | |
| 33. | ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து போதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால் வாதைப்பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே பேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே ! |
| | |
| 34. | சுரப்பற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழில்களற்று கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மன மடங்கப் பரப்பற்றி ருப்பதன் றோ? பர மா ! பரமானந்தமே ! |
| | |
| 35. | பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச் சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே ! |
| | |
| 36. | விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீண னிட்ட முடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச் |