8. | திருக்கச்சிக்காரோணம் அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும் சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப் பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி இசிக்குதையா காரோண ரே. |
| | |
9. | திருக்காளத்தி பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய் மனமே உனக்கென்ன மாண்பு ? |
| | |
10. | திருவிருப்பையூர் மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை கருப்பையூர் வாராமற் கா |
| | |
11. | திருவையாறு மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன் கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார் ஐயா திருவை யாறா |
| | |
12. | திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு ! |
| | |
13. | பொது சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம் |