| | பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண் |
| | |
| 2. | தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது தேடினவர் போய்விட்டார் தேறியிரு - நாடி நீ என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான் உன்னை நினைத்தால் உதை. |
| | |
| 3. | வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங் காசைப் படுவதில்லை அண்ணலே - ஆசைதனைப் பட்டிருந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி சுட்டிறந்த ஞானத்தைச் சொல். |
| | |
| 4. | நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும் இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் - பிச்சைதனை வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே தூங்குவம் தானே சுகம். |
| | |
| 5. | இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம் இளைத்தாலும் போகேன் இனி. |
| | |
| 6. | விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு) எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். |
| | |
| 7. | ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி. |
| | |
| 8. | வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது கட்டளையும் கைப்பணமும் காணதே - இட்டமுடன் பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன் இற்றெனவே வைத்த இனிப்பு |