| | பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு உய்யடா உய்யடா உய் ! |
| | |
| 17. | இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான் ! |
| | |
| 18. | எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ - வித்தகமாய்க் காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான் ! |
| | |
| 19. | மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து வேலை மினுக்கிட்டு விழித்திருந்து - சூலாகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை பித்தானால் என்செய்வாள் பின் ? |
| | |
| 20. | வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட நான்தேடி நான்காண நானாரோ நானாரோ. |
| | |
| 21. | நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே ! |
| | |
| 22. | மத்தளை தயிர்உண்டானும் மலர்மிசை மன்னி னானும் நித்தமும் தேடிக் காணா நிமலனே நீஇன் றேகிச் செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே ! |