| 3. | வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும் படிகொண்டாரும் ஊரிலே பழிகொண்டால் நீதியோ குடிவந்தானும் ஏழையோ ? குயவன் தானும் கூழையோ ? நடுநின்றானும் வீணனோ ? நகரம் சூறை ஆனதே. |
| | |
| 4. | மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும் பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும் அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான் எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே. |
| | |
1 | முதல்வன் முறையீடு கண்ணிகள் கன்னி வனநாதா - கன்னி வனநாதா மூலம் அறியேன்; முடியும் முடிவறியேன் ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! |
| | |
| 2. | அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா! பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! |
| | |
| 3. | தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா! மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! |
| | |
| 4. | மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா! தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா! (கன்னி வனநாதா! கன்னி வனநாதா) |
| | |
| 5. | மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா! பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. |
| | |
| 6. | மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே; திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே. |
| | |
| 7. | வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே. |