| 8. | மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே; சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே. |
| | |
| 9. | கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே; செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே; |
| | |
| 10. | மாற்றும் சலவை மறக்கேனே என்குதே; சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே. (கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!) |
| | |
| 11. | ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே. |
| | |
| 12. | காமக் குரோதம் கடக்கேனே என்குதே! நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே. |
| | |
| 13. | அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே; கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே; |
| | |
| 14. | நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே! ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே. |
| | |
| 15. | கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும் எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே. |
| | |
| 16. | அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே. |
| | |
| 17. | நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே. |
| | |
| 18. | குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே; அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே. |
| | |
| 19. | மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே. ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா! |
| | |
| 20. | கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா! எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா! (கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!) |