| 34. | பாசம் எரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை; பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை; |
| | |
| 35. | அடிமை என்று சொன்னையிலை; அக்கமணி சந்தையிலை; விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை; |
| | |
| 36. | உன்னில் அழைத்தயிலை; ஒன்றாகிக் கொண்டையிலை; நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை; |
| | |
| 37. | ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான் ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை |
| | |
| 38. | நாமம் தரித்தையிலை; நான் ஒழிய நின்றையிலை; சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை; |
| | |
| 39. | முத்தி அளித்தையிலை; மோனம் கொடுத்தையிலை; சித்தி அளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை. |
| | |
| 40. | தவிப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை; அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை; |
| | |
| 41. | நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை; துன்றுங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை; |
| | |
| 42. | கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை; நிட்டையிலே நில்என்று நீ நிறுத்திக் கொண்டையிலை. (கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!) |
| | |
| 43. | கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா! கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! |
| | |
| 44. | காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ! சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ! |
| | |
| 45. | உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ! பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேனோ! |
| | |
| 46. | ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ! பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ! |