| 47. | வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ! சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ! |
| | |
| 48. | இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ! விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ! |
| | |
| 49. | ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ! மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ! |
| | |
| 50. | மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ! ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ! |
| | |
| 51. | கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ! தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ! |
| | |
| 52. | அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ! திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ! |
| | |
| 53. | செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ! அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ! |
| | |
| 54. | முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ! அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ! |
| | |
| 55. | மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ! சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ! |
| | |
| 56. | கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ! பொங்கு அரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ! |
| | |
| 57. | சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ! எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ! |
| | |
| 58. | கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ! அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ! |
| | |
| 59. | தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ! தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ! |
| | |
| 60. | வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ! ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ |