| 61. | அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப் பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ! |
| | |
| 62. | சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ! சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ! (கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!) |
| | |
| 63. | கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா! பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ! |
| | |
| 64. | நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ? எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ? |
| | |
| 65. | வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ? தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ? |
| | |
| 66. | வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ? சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ? |
| | |
| 67. | ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ? ஊனம்அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ? |
| | |
| 68. | என்னென்று சொல்லுவண்டா? என்குருவே! கேளேடா! பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே. (கலை வனநாதா! - கன்னி வனநாதா) |
| | |
| 69. | அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ? சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ? |
| | |
| 70. | உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ? மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ? |
| | |
| 71. | ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ? செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ |
| | |
| 72. | வாக்கு மனாதீத அகோசரத்தில் செல்ல எனைத் தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி! |