வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள மந்திரங்களும் எச்சில், பசு மடியில் கன்று குடித்த பால் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி லொளியுமெச்சில் மோதகங்களான தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில் எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார். புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய் புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149) என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும், “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159) “மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160) என்ற பாடலில் மாட்டிறைச்சி தின்பது பாவம் என்று அருவறுக்கும் வேதியர்களே மாட்டிறைச்சிதான் உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா? ஆட்டிறைச்சி தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி செய்யப் படுவதும், நெய்யாய் இடுவதும் எது என்பதை யோசிப் பீர்களாக என்கிறார். சாதி வேற்றுமைகளைக் கடிதல் சிவவாக்கியர் தம் பாடல்களில் சாதி வேற்றுமைகளை மிகவும் ஆணித்தரமாகக் கண்டிக்கிறார். “சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ |