பக்கம் எண் :

218சித்தர் பாடல்கள்

புல்லு மோட்சநிலை                           பசுவே
     பூரணங் காண்பாயே.
35
  
ஒன்றைப் பிடித்தோர்க்கே                      பசுவே
     உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே                           பசுவே
     நேர்மை யறிவாயே.
36
  
எல்லா மிருந்தாலும்                            பசுவே
     ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே                       பசுவே
     எண்ணிப் பணிவாயே.
37
  
தேவனு தவியின்றிப்                           பசுவே
     தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கு மாவியதாம்                          பசுவே
     அத்தன் திருவடியே.
38
  
தாயினும் அன்பனன்றோ                       பசுவே
     சத்திக்குள் ளானவன்தான்
நேயம் உடையவர்பால்                         பசுவே
     நீங்கா திருப்பானே.
39
  
முத்திக்கு வித்தானோன்                        பசுவே
     மூலப் பொருளானோன்
சத்திக் குறவானோன்                          பசுவே
     தன்னைத் துதிப்பாயே.
40
  
ஐயன் திருப்பாதம்                            பசுவே
     அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம்                      பசுவே
     விட்டொடுங் கண்டாயே.
41
  
சந்திர சேகரன்றாள்                            பசுவே
     தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர்                        பசுவே
     ஏவல் புரிவாரே.
42