பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்357


 பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
     பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!
  
73.நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
     நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
     விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!
  
74.வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
     கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
     விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!
  
75.வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
     காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
     கும்மிக்கு மேலான பாடலில்லை.
  
76.நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
     நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
     பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!
  
77.ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
     ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
     அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!
  
78.இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
     என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
     ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!
  
79.வீணாசை கொண்டு திரியா தேயிது
     மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
     காணலா மாகாய மாளலாமே.