பக்கம் எண் :

358சித்தர் பாடல்கள்

80.பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
     பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
     கொடுத்த தாயும் நிசமாமோ?
  
81.தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
     தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
     கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!
  
82.பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
     பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
     சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.
  
83.பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
     போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
     திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.
  
84.திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
     சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
     அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!
  
85.மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
     மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
     செத்த சவமடி வாலைப் பெண்ணே!
  
86.ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
     கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
     நான்மறை வேத முழங்குதடி.
  
87.பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
     பாவந் தொலைய முடியாதே;