| தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும் வஞ்சனை செய்ய நினையாதே. |
| |
88. | கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில் காணாத வுத்தரம் விள்ளாதே; பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே. |
| |
89. | சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில சீர்புல ஞானப் பெரியோரை மவுன மாகவும் வையா தேயவர் மனத்தை நோகவும் செய்யாதே. |
| |
90. | வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு மங்கையர் மேல்மனம் வையாதே; பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே! |
| |
91. | கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக் கொலைக ளவுகள் செய்யாதே ஆடிய பாம்பை யடியா தேயிது அறிவு தானடி வாலைப் பெண்ணே! |
| |
92. | காரிய னாகினும் வீரியம் பேசவும் காணா தென்றவ்வை சொன்னாளே; பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப் பழம்போ லுதிர்ந்து விழுந்தானே. |
| |
93. | காசார் கள்பகை செய்யா தேநடுக் காட்டுப் புலிமுன்னே நில்லாதே; தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத் தேவடி யாள்தனம் பண்ணாதே. |
| |
94. | தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே; உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில் ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே! |