ஞானம் - 1 எண்சீர் விருத்தம் சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு; புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு; பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி; சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம் சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே. |