காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக் கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. | 1 |
| |
கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே கருவதனை யறியாமல் மாண்டு போனான் விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம் வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்; ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால் ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும் பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்திவழி பேசுவேனே. | 2 |
| |
பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்; பின்கலைதா னாதித்தனாதி யாச்சு; நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி நீங்காம லொன்றானா லதுதான் முத்தி; காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்; காணாத பேர்க்கென்ன காம தேகஞ் சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச் சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. | 3 |
| |
வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை? ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி; உற்றபர மடிதானே பதினாறாகும்; தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு; சார்வான பதினாறில் மெள்ள வாங்கி ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. | 4 |
| |
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை; நேரையா இரண்டிதழி னடுவே வைத்து நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு; | |