பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்381


காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
     கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
     நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே.
1
  
கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
     கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
     வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
     ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
     பேரின்ப முத்திவழி பேசுவேனே.
2
  
பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
     பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
     நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
     காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
     சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே.
3
  
வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
     வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
     உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
     சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
     எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே.
4
  
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
     பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
     நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;